Tuesday, October 18, 2022

புதுமுகங்கள்

 அண்மையில் பல விடபபட்ட நபர்களில் நட்பு கிடைக்கின்றது.

முகநூலில் பலருடைய நட்பு நம்ம தேடி வருகின்றது.

இந்த ஆட்களில் பலரும் முகம் தெரியாதவர்கள் முன்பின் அறியாதவர்கள்.

ஆனால் எப்படி அவர்களுக்கு நட்பு தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் காலை வணக்கம் என்றும் இரவு வணக்கம் என்றும் சொல்ல முடிகிறது அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்று எல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்..

காணுகின்ற ஒவ்வொரு ஆட்களுக்குள்ளும் பலவித அனுபவங்கள் ஒழிந்து, ஒளிந்தே கிடக்கின்றன. 

சிலரைப் போல நானும் சகஜமாக பழக  நினைக்கின்றேன் ஆனால் இயலவில்லை.

ஒருவேளை மரியாதை இல்லாமல் அழைத்து விடுவோமோ என்கிற பயம்.

அல்லது அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தார்கள் என்று தெரியாமல் அவர்களை தொந்தரவு செய்வோமோ என்கிற கலக்கம்.